டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். உலக முழுவதும் பரவி வரும் கொரோனோ வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அதை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.