×

கொரோனா குறித்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய 2 பேர் கைது

சென்னை: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், இருங்காலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவர், மதுரையில் தங்கி நெல் கதிர் அறுவை வாகன  தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே ராஜாக்கூர் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கொரோனா வைரஸ் பாதித்த 47 பேரை தங்க வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும், அதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில்  ஈடுபட்டு வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டார்.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார், செல்வம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். நாகை  மாவட்டம் குத்தாலம் மேலசெட்டி தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (32). கடந்த 10 நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்துள்ளார். இதற்கிடையே அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய மயிலாடுதுறை கில்லிபிரகாஷ்(35) என்பவரை புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

Tags : arrest ,Watts Up Corona , Corona, gossip and arrest
× RELATED 3 வயது குழந்தையிடம் செக்யூரிட்டி சில்மிஷம்: போக்சோ சட்டத்தில் கைது