×

30,000 லஞ்சம் வாங்கிய பிடிஓ அதிரடி கைது

க.பரமத்தி: திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி அருகே காதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர், க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் பகுதியில் நிலம்  வாங்கி அந்த நிலத்தை 17 வீட்டு மனைகளாக பிரித்துள்ளார். மனைகள் விற்பனை செய்வதற்காக மனைப்பிரிவு ஒப்புதல் பெறுவதற்கு க.பரமத்தி வட்டார  வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ஜெயந்திராணியை அணுகியுள்ளார்.

அவர் ஒப்புதல் வழங்க 34,000 லஞ்சம் கேட்டுள்ளார். பிறகு ரமேஷ் 30,000 தருவதாக ஒப்புக்கொண்டு, லஞ்சம் தர விரும்பாத ரமேஷ், கரூர் ஊழல் தடுப்பு  மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அவர்களின் ஆலோசனைப்படி ரமேஷ், ரசாயனம் தடவிய 30ஆயிரத்தை க.பரமத்தி ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ஜெயந்திராணியிடம் நேற்று கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ஜெயந்திராணியை கையும் களவுமாக பிடித்து  கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : PDO , Bribery, PDO, arrest
× RELATED குமரியில் அனுமதியின்றி கூட்டம்...