×

கருமத்தம்பட்டியில் பிடிவாரண்டை விழுங்கிய ஆசாமி

சூலூர்: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். செக் மோசடி வழக்கில் தங்கவேலுவை கைது செய்வதற்காக நீதிமன்ற  பிடிவாரண்டுடன் நேற்று முன்தினம் கர்நாடக போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது தங்கவேலு, ‘‘பிடிவாரண்ட் இருக்கிறதா?’’ என  கேட்டுள்ளார். போலீசாரும் வாரண்டை கொடுத்தனர்.

அதை வாங்கிய தங்கவேலு, வாயில் போட்டு முழுங்கிவிட்டார். இதனால் செய்வதறியாது திகைத்த போலீசார், கருமத்தம்பட்டி போலீசின் உதவியை  நாடினர். கருமத்தம்பட்டி போலீசார் சென்று, ‘‘விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வருவேன்’’ என்ற வாக்குறுதியை தங்கவேலுவிடம் பெற்று  பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.

Tags : Asami , Karumattampatti, warrant, Asami
× RELATED பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்-...