×

கொரோனா வைரஸ் பீதி காரணமாக சென்ட்ரல், எழும்பூரில் இருந்து செல்லும் ஏராளமான ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பீதி மற்றும் பயணிகள் கூட்டம் இல்லாததால் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் மற்றும் வந்து செல்லும் வெளிமாநில ரயில்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: சந்திரகாச்சி- சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சுவீதா சிறப்பு ரயில் வரும் 20, 27 ஆகிய தேதிகளிலும், அதேபோன்று சென்ட்ரல்- சந்திரகாச்சி இடையே இயக்கப்படும் சுவீதா சிறப்பு கட்டண ரயில் 21, 28 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, பராமரிப்பு பணிகள் காரணமாக சாப்ரா- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கங்கா காவேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் வரும் 23, 25, 30 மற்றும் மார்ச் 1, 6 ஆகிய தேதிகளிலும், சென்னை சென்ட்ரல்- சாப்ரா இடையே கங்கா காவேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் 21, 23, 28, 30 மற்றும் ஏப்ரல் 4ம் தேதி இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை சென்ட்ரல்- மதுரை ஏசி துரந்தோ எக்ஸ்பிரஸ் 23, 25, 30ம் தேதியும், மதுரை- சென்னை சென்ட்ரல் ஏசி துரந்தோ எக்ஸ்பிரஸ் 24, 26, 31ம் தேதியும், சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் ஏசி வாராந்திர எக்ஸ்பிரஸ் 20, 24, 27 31 ஆகிய தேதிகளிலும், திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் ஏசி வாராந்திர எக்ஸ்பிரஸ் 22, 25, 29, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளிலும், மங்களூர் சென்ட்ரல்- மட்கோன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், மட்கோன்- மங்களூர் சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், சென்னை சென்ட்ரல்- செகந்திரபாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் 20, 22 ஆகிய தேதிகளிலும், செகந்திராபாத்- சென்னை சென்ட்ரல் இடையேயான ரயில் 21, 23 ஆகிய தேதிகளிலும், எர்ணாகுளம் ஜங்ஷன்- வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் 21ம் தேதியும், வேளாங்கண்ணி- எர்ணாகுளம் ஜங்ஷன் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 22ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

இதுபோல, ஜபால்பூர்-கோவை ரயில் மார்ச் 21 முதல் 28ம்தேதி வரையும், மறுமார்க்கத்தில் இந்த ரயில் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரையும்ரத்து செய்யப்படுகிறது. ஜபல்பூர்- திருநெல்வேலி வாராந்திர ரயில் 26ம் தேதியும்,மறுமார்க்கத்தில் 28ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது. வரும் 31ம் தேதி வரைதிருப்பதி-சென்ட்ரல் ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது. 25ம் தேதி ஐதராபாத்-எர்ணாகுளம் ரயில், 26ம் தேதி எர்ணாகுளம்-ஐதராபாத் ரயில், 23ம் தேதி ஐதராபாத்-எர்ணாகுளம் ரயில், 25ம் தேதி திருச்சி-ஐதராபாத் ரயில்,சாம்பல்பூர்-பனாஸ்வாடி ரயில் 18 மற்றும் 25ம் தேதி வரையிலும்,பனாஸ்வாடி-சாம்பல்பூர் ரயில் 19 மற்றும் 26ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. சென்ட்ரல்-செகந்திராபாத் ரயில் 27மற்றும் 29ம் தேதியும், மறுமார்க்கத்தில் 28 மற்றும் 30ம்தேதியும், திருவனந்தபுரம்- சென்ட்ரல் ரயில் ஏப்ரல் 1ம் தேதியும்,மறுமார்க்கத்தில் 2ம் தேதியும், எர்ணாகுளம்-ராமேஸ்வரம் ரயில் ஏப்ரல்2ம் தேதியும், மறுமார்க்கத்தில் 3ம் தேதியும், விழுப்புரம்-செகந்திராபாத் ரயில் ஏப்ரல் 1ம் தேதியும், மறுமார்க்கத்தில் 2ம்தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

* வரும் 19ம் தேதி (இன்று) முதல் 31ம் தேதி வரைசெங்கோட்டை-கொல்லம்-செங்கோட்டை ரயில், கொல்லம் - புனலூர்-கொல்லம் ரயில்,கொல்லம்-புனலூர்-கொல்லம், புனலூர்- கொல்லம்- புனலூர், திருநெல்வேலி-தூத்துக்குடி-திருநெல்வேலி, திருநெல்வேலி-திருச்செந்தூர்-திருநெல்வேலி, காரைக்குடி-விருதுநகர்-காரைக்குடி,காரைக்குடி-திருச்சி-காரைக்குடி, திருச்சி-மானாமதுரை-திருச்சி ஆகிய ரயில்கள் முழுவதும்ரத்து செய்யப்படுகிறது. இதேபோல இன்று முதல் வரும் 31ம் தேதி வரை குருவாயூர்-புனலூர்-குருவாயூர் ரயில் கொல்லம்-புனலூர்-கொல்லம் இடையே ரத்துசெய்யப்படுகிறது. விழுப்புரம்-மதுரை-விழுப்புரம் ரயில் திருச்சி-மதுரை-திருச்சிஇடையே ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவிப்பில் கூறியுள்ளது.


Tags : Southern Railway ,Central ,Egmore Most ,Egmore , Corona Virus, Central, Egmore, Trains canceled, Southern Railway
× RELATED கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக...