×

கோவில்பட்டி அருகே 2 முறை தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி தூக்கில் சாவு

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே அய்யனரி மேலகாலனியை சேர்ந்தவர் ராமசாமி மகன் முத்துகிருஷ்ணன்(30) தொழிலாளி. இவர் நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவல் அறிந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எஸ்.ஐ.முத்து விஜயன் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துகிருஷ்ணன், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில்  ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததால் உயர்தப்பினார். தற்போது 3வது சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இறந்த முத்துகிருஷ்ணனுக்கு மனைவி குட்டி யம்மாள்(28) மற்றும் மகள்கள் புவனேஸ்வரி(4), விஜயா(2) ஆகியோர் உள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,Kovilpatti ,death , Kovilpatti, suicide, worker, death
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!