×

திருமலையில் உள்ள வேணுகோபால சுவாமி கோயில் அருகே யானைகள் கூட்டத்தால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள திருமலையில் இருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில் இருக்கும் ஆகாச கங்கை தீர்த்தம் மற்றும் வேணுகோபால சுவாமி கோயிலுக்கு மத்தியில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கூட்டம் சாலையை கடந்து கடந்து சென்றது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பக்தர்கள் யானை கூட்டத்தை பார்த்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு யானைகள் செல்லும் வரை சாலையின் இருபுறமும் காத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து யானைகள் கூட்டம் பக்தர்கள் உள்ள இடத்திற்கு வராத வகையில் பார்த்துக் கொண்டனர். மேலும் யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : Pilgrims ,Venugopala Swamy Temple ,Tirumala ,Thirumalai ,Devotees ,Elephants Meeting , Thirumalai, Venugopala Swamy Temple, Elephants Meeting, Devotees
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ