×

பாலக்காடு அருகே வயல் பகுதியில் தூங்கிய வெளிநாட்டுக்காரர் கைது: கொரோனா பீதியில் நடவடிக்கை

திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே வயல்வெளியில் தூங்கிய வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் யுவான் ஜாக்விஸ். சைக்கிளில் பல்வேறு நாடுகளை சுற்றி வருகிறார். கடந்த ஜனவரியில் திருவனந்தபுரம் வந்தார். பல இடங்களையும் சைக்கிளில் சுற்றுப்பார்த்தார். பின்னர் இலங்கை சென்றார். இதையடுத்து சென்னை திரும்பியவர் மீண்டும் கேரளாவுக்கு வந்தார். கோவை வழியாக நேற்று முன்தினம் பாலக்காடு வந்தவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொடுவாயூர் பகுதியில் சென்றபோது மிகவும் களைப்படைந்தார். அப்போது வயல் பகுதியை பார்த்தவர் சிறிது ஓய்வெடுக்க விரும்பினார். இதமான காற்று வீசியதால் வயலில் படுத்து தூங்கி விட்டார். இரவு முழுவதும் எழும்பவில்லை.

நேற்று காலை வயலுக்கு வந்த தொழிலாளர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  காரோனாவால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து கிடப்பதாக நினைத்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தன்னுடன் சைக்கிளையும் கொண்டு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். இதையடுத்து சைக்கிளும் அவருடன் பயணித்தது. பின்னர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Foreigner ,sleeping field ,Palakkad ,Palakkad Foreigners , Foreigners arrested in Palakkad
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது