சென்னை: அதிகம் மக்கள் கூடக்கூடிய வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை மட்டுமே மூட உத்தரவிடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். காய்கறி, பழங்கள், இறைச்சி, மீன் விற்பனை நிலையங்கள் செயல்பட எந்த தடையும் இல்லை என மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்தார். அனைத்து சிறிய கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களும் இயங்கத்தடை இல்லை என தகவல் தெரிவித்தார்.