×

சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைப்பு - மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிப்பு

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என கூறினார். தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்தார். 


Tags : shops ,city ,Chennai ,Thyagaraya , In Chennai, Thyagaraya town, the shops and sewers are disinfectant
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி