×

ஜம்மு காஷ்மீர் எல்லையில் 3வது நாளாக பாக். தாக்குதல்

ஜம்மு:  ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் கிர்னி, குவாஸ்பா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், 3வது நாளாக நேற்றும் இந்த தாக்குதல் தொடர்ந்தது.  பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்கட்டுபாடு கோடு பகுதி அருகே உள்ள மான்கோட், மென்தார் பகுதிகளில் காலை 6 மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லையோர கிராமங்கள், குடியிருப்புகளை குறிவைத்து சிறிய ரக ஆயுதங்கள், குண்டுகள் மூலம்  தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.



Tags : Bagh ,Jammu ,border ,Kashmir ,Attack , Jammu, Kashmir, border, Pakistan
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...