×

துறைமுகம் தொகுதியில் உள்ள 300 மின்மாற்றிகளை மாற்ற வேண்டும்: பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, துணை கேள்வி எழுப்பி துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பி.கே.சேகர்பாபு (திமுக) பேசியதாவது: 2017ம் ஆண்டு நான் கேட்ட கேள்வி குறித்த கோரிக்கை. ஆர்.எம்.யு. எனப்படுகின்றன ரிங் மெயின் யூனிட்கள், தற்போது இரண்டாண்டு காலமாக அந்த புதிய திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவில்லை. முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்த அறிக்கையிலேயே ஒட்டுமொத்த சென்னையிலே இருக்கின்ற பில்லர்கள் பொருத்தப்பட்ட மின்னழுத்த மாற்றிகளை மாற்றி, ஆர்.எம்.யு. அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

துறைமுகம் தொகுதியில் 300 மின்மாற்றிகள் இருக்கின்றன. உடனடியாக அவை காலப்போக்கில் மாற்றப்படும் என்று அறிவித்து இரண்டுகள் முடிவடைந்து விட்டன. எனவே, மீண்டும் அந்த மின்மாற்றிகளை மாற்றி ரிங் மெயின் யூனிட் என்கிற லேட்டஸ்ட் டெக்கனாலஜி கொண்ட மின்மாற்றிகளை அமைக்க வேண்டும். அமைச்சர் தங்கமணி: உறுப்பினர் கூறியது உண்மை. 2017ல் டெண்டர் ஒப்பந்தம் கோரப்பட்டு, சிலர் நீதிமன்றம் சென்ற காரணத்தினால் அது இப்பொழுதுதான் முடிந்து, ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ஒப்பந்த பணிகள் முடிந்து, பணிகள் துவங்கும். விரைந்து அந்த பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : port constituency ,PK Sekharpabu MLA ,PK Sekharbabu MLA , Port Module, 300 Transformer, Converter, PK Sekharpabu MLA
× RELATED துறைமுகம் தொகுதியில் பாஜக கள்ள...