×

ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் பதவி ஏற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவியேற்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ் , ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகிய  9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையை ஏற்று, 9 நீதிபதிகளையும் நிரந்தர நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் கடந்த மாதம்  உத்தரவிட்டார். இவர்களில், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிமாற்றம் செய்யப்பட்டதால், மீதமுள்ள 8 நீதிபதிகளும் நேற்று நிரந்தர நீதிபதிகளாக  பதவியேற்றனர்.அவர்களுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Tags : highcourt ,judges , highcourt , Judge , sworn
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...