×

போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் சிறையிலடைப்பு

பல்லாவரம்: பம்மல், அன்சாரி மகால் எதிரே உள்ள டீக்கடையில் கடந்த 15ம் தேதி போதையில் 2 வாலிபர்கள் தாக்கிக் கொள்வதாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தலைமை காவலர் மனோஜ் என்பவர், அங்கு சென்று, போதையில் இருந்த பம்மலை சேர்ந்த ஷேக் (எ) ஆபிரகாம் (29) மற்றும் பம்மல், நாகல்கேணியை சேர்ந்த சக்திவேல் (28) ஆகியோரை சமாதானம் செய்தார். அப்போது, அவர்கள் இருவரும் போலீஸ்காரரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று நாகல்கேணியில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : policeman , Policeman, beaten, 2 others, incarcerated
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...