மாட்ரிட்: ஸ்பெயினை சேர்ந்த 21 வயது கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இறந்துள்ளது விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலாகா நகரை சேர்ந்த அத்லெடிகோ போர்டடா அல்டா கிளப்பின் இளைஞர் அணி பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கார்சியா, ஏற்கனவே ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நோயின் தாக்கம் அதிகரித்து இறந்துவிட்டதாக கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கார்சியாவின் மறைவுக்கு கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.