×

சின்னாளபட்டி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

சின்னாளபட்டி: சின்னாளபட்டி பேரூராட்சிகளில் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் நகர் முழுவதும் உள்ள கழிவறைகள் மற்றும் குளியல் அறைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சோப்பு, துண்டு வைத்து ‘கொரோனா வைரஸ்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. காந்தி மைதானம், பூஞ்சோலை, நடுத்தெரு, மேட்டுப்பட்டி, செக்காபட்டி உட்பட பல இடங்களில் பொதுக்கழிவறைகள் உள்ளன.

இந்த கழிவறைக்கு நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்ற இடங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். இது தவிர முக்கிய இடங்களில் கொரோனா வைரசிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்த விளம்பர பதாகைகளையும் வைத்துள்ளனர்  தவிர தெருக்களுக்குள் செல்லும் குப்பை சேகரிக்கும் வண்டிகள் உட்பட பேரூராட்சிகளின் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர். நேற்று பேருந்து நிலையத்தில் உள்ள பயனிகள் உட்காரும் நாற்காலிகள், நிழற்குடை ஆகியவற்றிற்கு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது.

Tags : Corona , Chinnalapatti panorakshi, corona awareness
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...