ஈரான்: ஈரானுக்கு புனித பயணம் சென்ற 254 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா அனுப்பி வைத்த மருத்துவர்கள் குழு, ஈரானில் உள்ள 254 இந்தியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தது. கடந்த 12 நாட்களாக சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருந்த ரத்தமாதிரி முடிவுப்படி 254 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.