புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கர்பிணி பெண் உயிரிழந்துள்ளார். பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தமிழரசி என்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த பிறகு உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது. தஞ்சை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் தமிழரசி உயிரிழந்துள்ளதாக கூறினார்.