×

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக உயர்வு : மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை

டெல்லி : இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரிப்பு


இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 103 பேர் இந்தியர்கள், 22 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர்.இந்த வைரஸுக்கு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 64 வயது நபர் பலியாகியுள்ளார்.

கேரளா – 22 (வெளிநாட்டினர் – 2), மகாராஷ்டிரா- 36 (வெளிநாட்டினர் – 3), உ.பி.-12 (வெளிநாட்டினர் – 1), டெல்லி – 7, கர்நாடகா – 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லடாக் – 4, ராஜஸ்தான் -2 (வெளிநாட்டினர் – 2), தெலுங்கானா – 4, தமிழ்நாடு -1, ஜம்மு & காஷ்மீர் – 3, பஞ்சாப் -1, ஹரியானா – (வெளிநாட்டினர் -14), ஆந்திரா – 1, ஒடிஷா – 1, உத்தரகண்ட் – 1 என மொத்தம் 125 பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 13 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர்.

மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை


சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.இந்தியாவிலும் 125 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவில், வணிக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள், பார்க், டாஸ்மாக் என மக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டுள்ளனர்.மேலும் நாட்டின் அனைத்து எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர இம்மாதம் முழுவதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Tags : Coroner ,India ,Corona 3 ,Philippines ,Afghanistan ,Malaysia , In India, the death toll from Corona 3-rises, Malaysia, the Philippines, Afghanistan, India, the ban on travelers from countries
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...