சென்னை: சென்னை நகர் முழுவதும் புதைவட கம்பிகள் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக தாம்பரம் மற்றும் பெரம்பூர் கோட்டம் பகுதிகளில் புதைவட கம்பிகள் மாற்றப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார். தாம்பரம் பகுதிகளில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதைவட கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.