டெல்லி: ராணுவத்தை போல் கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராணுவத்தில் களத்தில் இறங்கி சண்டையிடாத பணிகளில் பெண்களுக்கு நிரந்தர பணி தர ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பால் அதிகாரிகள் மட்டத்தில் ஆண்களுக்கு நிகரான சலுகைகளை பெண்களுக்கும் பெற வாய்ப்பு உள்ளது.