×

16 மாவட்டத்தில் 31ம் தேதி வரை திமுக நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 31ம் தேதி வரை ஒத்தி வைத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



Tags : DMK , DMK postpones
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...