நெல்லை: அம்பை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி, வேலைக்காக கேரளா சென்று வந்தார். அவருக்கு தொடர்ந்து இருமலும், சளியும் இருந்துள்ளது. இதையடுத்து அவர் நேற்று அம்பை மருத்துவமனையில் இருந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். உடனிருந்த அவரது மனைவியும் சிகிச்சைக்காக அதே வார்டில் சேர்க்கப்பட்டார்.