×

தெலங்கானாவில் பயங்கர விபத்து லாரி மீது பஸ் மோதி 7 பெண்கள் பரிதாப பலி: 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருமலை: தெலங்கானாவில் லாரி மீது பஸ் மோதியதில் 7 பெண்கள் பரிதாபமாக பலியாயினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தெலங்கானாவின் பசலவடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் எடுப்பயலாவில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று லாரியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேதக்கில் இருந்து சங்காரெட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் சங்கய்யபேட்டை என்ற இடத்தில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் வந்தவர்களில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் பஸ், லாரியில் வந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வலியால் அலறித்துடித்தனர். இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மீட்டு, மேதக் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள், படுகாயமடைந்தவர்களின் விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து கொல்ச்சாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  சீனிவாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Telangana , Telangana, terror accident, lorry, bus collision, 7 women
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!