×

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம்: அனில் அம்பானிக்கு சம்மன்: நாளை மறுநாள் ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், வோடபோன், டிஎச்எப்எல், எஸ்ஸெல், ஐஎல்எப்எஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விதிகளை மீறி யெஸ் வங்கி பல ஆயிரம் கோடி ரூபாய்  கடன் வழங்கியது. இதன் மூலம் ராணா கபூர், அவரது குடும்பத்தினர், 4,300  கோடி மறைமுகமாக ஆதாயம் அடைந்ததாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. இது  தொடர்பாக யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது வழக்கு பதிவு செய்து அவரை  கைது செய்தது.

இந்நிலையில், யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீதான நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக, அனில் அம்பானிக்கு  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால்,  தனிப்பட்ட பிரச்னைகளால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க அனில்  அம்பானி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, நாளை மறுநாள் அவர் மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Anil Ambani ,Yes Bank ,Samman , Yes Bank, Affairs, Anil Ambani, Samman
× RELATED அமலாக்கத்துறை பாஜகவின் அரசியல்...