×

மயிலாப்பூரில் துணிகர சம்பவம்: தொழிலதிபர் வீட்டில் 10 லட்சம் கொள்ளை: நேபாள வாலிபருக்கு வலை

சென்னை: மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையை சேர்ந்தவர் விஷால் அகர்வால் (50). தொழிலதிபரான இவர், பிளாஸ்டிக் பிசினஸ் செய்து வருகிறார். கடந்த 7ம் தேதி விஷால் அகர்வால் தனது குடும்பத்துடன் வெளியூர் ெசன்றிருந்தார். வீட்டில் கடந்த ஒன்றறை மாதங்களாக நேபாள நாட்டை சேர்ந்த தீபக் என்பவர் வேலை செய்து வந்தார். இதனால் வெளியூர் சென்றபோது வீட்டில் தீபக்கிடம் பார்த்து கொள்ளும் படி கூறிவிட்டு சென்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தனது குடும்பத்துடன் விஷால் அகர்வால் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விஷால் அகர்வால், பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த 10 லட்சம் பணம் மாயமாகி இருந்தது. அத்துடன் வீட்டில் வேலை செய்துவந்த நேபாள வாலிபர் தீபக்கையும் காணவில்லை. அவரை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து மயிலாப்பூர் காவல்நிலையத்தில் விஷால் அகர்வால் புகார் அளித்தார். அதன்படி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் 10 லட்சத்துடன் மாயமான நேபாள நாட்டை சேர்ந்த தீபக்கை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags : house ,businessman ,Nepal Chennai ,robbery , Chennai, 10 lakh, robbery
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...