×

கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்திரத் தீர்வு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்திரத் தீர்வு என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு அமைக்கக்கோரி மீனவர் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு ஐகோர்ட் நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார்அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் ஏற்கனவே இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர். இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குனர் இன்று நேரில் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில்; இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை காண வேண்டும் என்றால் கச்சத்தீவை கண்டிப்பாக மீட்கவேண்டும். அந்த கச்சத்தீவை மீட்பது தொடர்பான நிலைப்பாட்டில் தமிழக அரசு திடமான நம்பிக்கையுடன் இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி நிலவரப்படி இதுவரை 3 தமிழக மீனவர்கள் மட்டுமே தற்போது இலங்கை சிறையில் இருப்பதாகவும், மற்றவர்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்க்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் 2009-ம் ஆண்டுக்கு பிறகு தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு, கைது நடவடிக்கை, மற்றும் படகுகள் பறிமுதல் என்பது பெரும்பாலான அளவு குறைந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் அரசு தரப்பில் உதவித்தொகையாக வழங்கப்பட இருக்கிறது. இது இதற்கு முன் 50 ரூபாயயாக மட்டுமே இருந்தது. அதை தற்போது 250 ரூபாயாக அதிகரித்து வழங்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1750 மீனவ குடும்பங்கள் இந்த திட்டத்தின் வாயிலாக பயனடைந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை அமல்படுத்த 286 கோடி ரூபாயை மத்திய, மாநில அரசுகள் தற்போது விடுத்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 750 படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு ஏற்றவாரு கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுளில் இந்த படங்குகள் அனைத்தும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். இதன் பிறகு இந்த அறிக்கை தொடர்பாக வழக்கு தொடர்ந்தவரும், அதுமட்டுமல்லாமல் மீனவர்களுக்காக அறிவிக்கப்பட்ட இந்த திட்டங்களில் எவ்வாறு முன்னேற்றங்கள் நடைபெற்று வருகின்றன என்பதை 6 வாரங்களில் மீண்டும் அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கை 6 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.


Tags : Kachchativu ,fishermen ,Tamil Nadu Government Information Rescuing Kachchativu ,Government ,Tamil Nadu , Kachchativu, Tamil Nadu Fishermen, Icort, Tamil Nadu Government
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...