×

கொரோனா அச்சுறுத்தலால் வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டம் ஒத்திவைப்பு: இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வண்ணாரப்பேட்டையில் நடந்துவந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் கடந்த மாதம் 14ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அவர்களின் போராட்டம் 32வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய போராட்டத்தின் போது முஸ்லிம் பெண்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு புறாக்கள் மூலம் தூதுவிட்டு நூதன போராட்டத்தை கையாண்டனர். போராட்டம் 32வது நாளை எட்டியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து போராட்டத்தை ஒத்திவைக்க பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

அது போல் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களும் ஒத்திவைக்க கோரிக்கை அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சி.ஏ.ஏ.க்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என சென்னையில் கூட்டாக பேட்டியளித்த, இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜாமொய்தீன் பாகவி கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக வண்ணாரப்பேட்டையில் நடந்து வந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நடந்து வந்த போராட்டங்களையும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது.


Tags : CAA ,fight ,leaders ,Corona ,organizations ,Washermenpet , Corona virus, Washermenpet , CAA protest, Islamists
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்