சென்னை: கச்சத் தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்திரத் தீர்வு என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு கேட்டு மீனவர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு வழக்கை விசாரித்தது.