×

விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட 362 பேர் விடுதலை

சென்னை: விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட 362 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 2013-ம் ஆண்டு மரக்காணத்தில் பாமகவை சேர்ந்த 2 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட 362 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Ramadas ,protests ,founder ,Villupuram. 362 ,Viluppuram , Villupuram, Demonstration, Ramadas, Founder of Pamaka, Liberation
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...