சென்னை: சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, ஆபரண தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. முதன் முதலாக கடந்த ஜனவரி மாதத்தில் தான் ஆபரண தங்கம் சென்னையில் சவரன் 31,000ஐ தாண்டியது. ஜனவரி மாத துவக்கத்தில் தொடர்ந்து 3 நாட்களில் சவரனுக்கு 1,280 உயர்ந்தது. கடந்த மாதம் தங்கம் விலை நிலையாகவே ஏறுமுகத்துடன் காணப்பட்டது. பின்னர், கடந்த 25ம் தேதி சவரனுக்கு 592 சரிந்தது. இதுபோல் கடந்த மாதம் 29ம் தேதி அதிகபட்சமாக சவரனுக்கு 624 குறைந்தது. பின்னர், கடந்த 4ம் தேதி 824, 6-ம் தேதி 784 அதிகரித்தது. கடந்த 11ம் தேதி 400 குறைந்தது. அதிகப்பட்சமாக கடந்த 13-ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு 1,152 சரிந்தது. கடந்த சனிக்கிழமை சவரன் ரூ.632 குறைந்து ரூ.31.472-க்கு விற்பனையானது.
நேற்று விடுமுறை நாள் என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், இன்று வார துவக்கத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.31.696-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 உயர்ந்து ரூ.4000-க்கு கீழ் சென்று ரூ.3,962-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் குறைந்து ரூ.43.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாள் தங்கம் விலை இறங்கிவந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது நகை பிரியர்களுக்கு பெரும் வேதனை ஏற்படுத்தியுள்ளது.