×

கொரோனா வைரஸ் தாக்கம்: ஈரானில் மீட்கப்பட்ட மேலும் 53 இந்தியர்கள் ராஜஸ்தான் வருகை

ஜெய்ப்பூர்: கொரோனா தாக்கம் உள்ள ஈரான் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 53 இந்தியர்கள் இன்று ராஜஸ்தானுக்கு வந்து சேர்ந்தனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா தாக்கம் உள்ள நாடுகளில் உள்ள இந்தியர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில் ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களில் 4வது குழுவினர் இன்று அங்கிருந்து தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு கொரோனா குறித்து முதற்கட்ட ஸ்கிரீனிங் சோதனை செய்யப்பட்டது. அவர்கள் கொண்டு வந்த லக்கேஜ்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர்கள் ராணுவ நலவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா தாக்கம் உள்ள நாடுகளில் உள்ள இந்தியர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில் ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களில் 4வது குழுவினர் இன்று அங்கிருந்து தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு கொரோனா குறித்து முதற்கட்ட ஸ்கிரீனிங் சோதனை செய்யப்பட்டது. அவர்கள் கொண்டு வந்த லக்கேஜ்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் ராணுவ நலவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


Tags : Indians ,Rajasthan ,Iran , 53 more Indians,rescued , Iran visit,Rajasthan
× RELATED எந்த நேரத்திலும் தாக்குதல்… இஸ்ரேல்,...