×

திருமண விருந்தில் பங்கேற்று திரும்பியபோது தடுப்புச்சுவரில் வேன் மோதி 4 வாலிபர்கள் பரிதாப பலி: 8 பேர் படுகாயம் ஆற்காடு அருகே பயங்கரம்

ஆற்காடு: ஆற்காடு அருகே திருமண விருந்தில் பங்கேற்று திரும்பியபோது நேற்று அதிகாலை தடுப்பு சுவரில் வேன் மோதி நண்பர்கள் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டையை சேர்ந்தவர் துபெயில் அகமது (20). ஏசி பழுதுபார்க்கும் கடை ஊழியர். இவரது நண்பரின் சகோதரி திருமணம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு சிறப்பு விருந்து  நடந்தது. இதில் துபெயில் அகமது, அவரது நண்பர்கள் ஹாரிப் (20), சையத் (20), கரீமுல்லா (19), ஹலீம் (20) உட்பட 12 பேர் கலந்துகொண்டனர்.

விருந்துக்கு பின்னர் ஹாரிப், நண்பர்கள் அனைவரையும் ஆற்காடு அடுத்த பஞ்சபாண்டவர் மலைக்கு தந்தையின் லோடு வேனில் அழைத்து சென்றார். நள்ளிரவு 1.45 மணியளவில் பஞ்சபாண்டவர் மலைக்கு சென்று, அதிகாலை 3 மணியளவில் மேல்விஷாரத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். ஹாஜிப்பேட்டை அருகே  திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் சிலர் கழிவுநீர் கால்வாயில் தூக்கி வீசப்பட்டனர். சிலர் வேனின் இடிபாட்டில் சிக்கி துடித்தனர்.  அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சையத், கரீமுல்லா, ஹலீம், துபெயில் அகமது ஆகிய 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.  ஹாரிப் உள்பட 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆற்காடு டவுன் ேபாலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : roadside collision Plaintiffs , Plaintiffs, kills, injury
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...