×

செல்போன் பறித்த 2 சிறுவர்கள் கைது

பெரம்பூர்: வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திக் (70), நேற்று அதிகாலை வியாசர்பாடி பஸ் நிறுத்தம் சென்ற போது அங்கு வந்த 3 சிறுவர்கள், கார்த்திக் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.அப்போது, அவ்வழியே வந்த ரோந்து போலீசார், 2 சிறுவர்களை மடக்கி பிடித்தனர். ஒரு சிறுவன் தப்பினான். விசாரணையில், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். * பம்மல், ஈஸ்வரி நகரை  சேர்ந்த ராஜேந்திரன் (35) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி,   விலையுயர்ந்த செல்போன், 1000 ரூபாயை பறித்து சென்ற படப்பை பகுதியை சேர்ந்த  வெங்கட் (20), சுரேஷ் (18)  ஆகிய இருவரை ேபாலீசார் கைது செய்தனர்.


Tags : boys , 2 boys,arrested , carrying cellphone
× RELATED தமிழ், மலையாளத்தில் சாதித்த நிலையில்...