×

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாத் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக், தியால்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரைக் கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.

நீண்ட நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில்  ஒருவன், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் தாரிக் அகமது என்றும், எஞ்சிய 3 பேரும் லஷ்கர்- இ- தொய்பா அமைப்பு தீவிரவாதிகள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பயங்கரவாதிகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

Tags : Security forces ,militants ,Kashmir ,Jammu ,district , Jammu and Kashmir, Anantnag, 4 militants, shot dead, security forces
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு