கோவை: தாய்லாந்தில் இருந்து சுற்றுலா வந்த இளைஞருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோட்டில் இருந்து கோவை விமான நிலையம் வந்த தாய்லாந்து பயணி ரோசாக்குக்கு கோரோனா அறிகுறி காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோசாக்கின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.