சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் போதிய முன்னெச்சரிக்கை இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு அரசு இலவச முகக்கவசம் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.