×

மதுரை அயிரை மீன் குழம்பு

செய்முறை : முதலில் பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெந்தயம் போட்டுத் தாளிக்கவும். பின் அதனுடன் கறிவேப்பிலை,
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு போட்டு நன்றாக வதக்கவும். பின் அதில் தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் 25 கிராம் புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் அயிரை மீன்களைப் போட்டு, ஐந்து நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். பின்னர் தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.மண் மணக்கும் மதுரை அயிரை மீன் குழம்பு ரெடி.

Tags : Madurai Iron , Madurai Iron fish broth
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...