×

தந்தையை போலீசில் மாட்டிவிட குடந்தை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நாடகமாடிய போதை வாலிபர் கைது

கும்பகோணம்: கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை வாலிபர் கைது செய்யப்பட்டார்.கும்பகோணம் ரயில் நிலையம், ஆவணியாபுரம், ஆடுதுறை தண்டவாளத்தில் வெடி குண்டு வைக்கப்போவதாக சென்னை ரயில்வே கட்டுப்பாட்டு  அறைக்கு மர்ம நபர் செல்போனில் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து போலீசார் கும்பகோணம் முதல் ஆவணியாபுரம் வரை உள்ள இருப்புப்பாதை,  ரயில் நிலையங்களை தீவிர சோதனை செய்தனர்.விசாரணையில், அந்த சிம் கார்டு ஆடுதுறையை சேர்ந்த ஹாஜாநஜாமூதீன் என்பவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது,  இவரது மகன் நிசார்அகமது (29) தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து திருநீலக்குடி போலீசார் நிசார் அகமதுவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நிசார் அகமது போதைக்கு  அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தனது தந்தையை போலீசில் சிக்க வைப்பதற்காக, அவருடைய செல்போன் மூலம்குண்டு  மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.



Tags : Bomb attack ,train station ,Kundantai Railway Station , Father , Kundantai, Railway Station,
× RELATED மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே...