பெரம்பூர்: செயின் பறித்து பைக்கில் தப்பிய திருடனை மொபட்டில் விரட்டிச்சென்று சுற்றிவளைத்து பிடித்த இளம்பெண்ணுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். பெரம்பூர் மதுரை தெருவை சேர்ந்த தீபக் ராஜேஷ் மனைவி நந்தினி (32). இவர் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள பூங்காவுக்கு சென்றுவிட்டு மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டின் அருகே உள்ள பள்ளி தெருவில் சென்றபோது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம ஆசாமி, திடீரென நந்தினி கழுத்தில் கிடந்த 2 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.உடனே நந்தினி தனது மொபட்டில் அந்த ஆசாமியை பின்தொடர்ந்து விரட்டி சென்றார். பெரம்பூர் பழனியாண்டவர் கோயில் தெருவில் அந்த ஆசாமியை சுற்றிவளைத்தார்.
பின்னர் அப்பகுதி மக்களின் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்தார். தகவலறிந்து வந்த செம்பியம் போலீசார், அந்த ஆசாமியை மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.அதில் பெரம்பூர், சின்னகுழந்தை, 2வது தெருவை சேர்ந்த சுல்தான் அலாவுதீன் (29) என தெரியவந்தது. அவரிடம் இருந்து செயினை மீட்ட போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். புளியந்தோப்பு கே.எம்.கார்டனை சேர்ந்த சங்கவி (23), நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 பேர் சங்கவியின் செல்போனை பறித்துகொண்டு தப்பினர்.