×

கல்லூரி வாசலில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

அண்ணாநகர்: அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி வாசலில் நின்று ஆசாமி ஒருவர்,  மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக அரும்பாக்கம்  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த வாலிபரை காவல் நிலையம் கொண்டுவந்தனர்.  விசாரணையில், அரும்பாக்கம் அசோக் நகரை சேர்ந்த சரவணன் (எ) குரங்கு சரவணன் (26) என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி  வந்து, மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.



Tags : plaintiff , college gate, Selling, Cannabis, arrested
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது