டெல்லி: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா உள்ளிட்ட உள்ளிட்ட சார்க் நாடுகள் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியில் அழைப்பை ஏற்று சார்க் நாடுகளின் தலைவர்கள் காணொலியில் நாளை மாலை ஆலோசிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளது.