திண்டுக்கல்: திருப்பதி போல் பழனி கோயிலுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் கோயிலை நவீனப்படுத்த ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக திண்டுக்கல் புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு தெரிவித்தார்.