×

பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை போலீஸ் காவலில் விசாரிக்க மனு

கோவை: கோவை ஆனைaகட்டியில் கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்ட்டை காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றத்தில் கியூ பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் கேரள மாநிலம் அட்டப்பாடி மஞ்சகண்டி வனப்பகுதியில் கேரள தண்டர்போல்ட் போலீசாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 5 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 பேர் துப்பாக்கி குண்டு காயத்துடன் தப்பி சென்றுவிட்டனர். கடந்த நவம்பர் 9ம் தேதி பில்லூர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தீபக் என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய ஸ்ரீமதி, ேசானாவை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், மாவோயிஸ்ட் ஸ்ரீமதி கேரள-தமிழக எல்லையில் உள்ள ஆனைகட்டியில் இருந்து பேருந்து மூலம் கோவை வருவதாக நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வாகன சோதனை நடத்தி, பேருந்தில் இருந்த மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பிறகு, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஸ்ரீமதியை வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார். இதையடுத்து ஸ்ரீமதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை மாவட்ட கியூ பிரிவு போலீசார் ஸ்ரீமதியை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது குறித்த விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.

Tags : Female Maoist ,Srimathi , Female Maoist, Srimathi, Police
× RELATED பெரியநெசலூரில் உள்ள கள்ளக்குறிச்சி...