தி.மலை: திருவண்ணாமலையில் நகராட்சி வரிகள் உயர்த்தப்பட்டதை கண்டித்து இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்களை கண்டித்து வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குப்பை வரி, பாதாள சாக்கடை வரி, வீட்டு வரி, குடிநீர் வரிகள் உயர்த்தப்பட்டத்தற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தேநீர், மளிகைக்கடை காய்கறி கடைகள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.