×

நாமக்கல் அருகே நள்ளிரவில் கோர விபத்து லாரி-கார் நேருக்கு நேர் மோதல் 6 தொழிலாளர் உடல் நசுங்கி பலி

நாமக்கல்: நாமக்கல் அருகே நள்ளிரவில், லாரி- கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், 6 தொழிலாளர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  நாமக்கல்லில் இருந்து திருச்சிக்கு, நேற்றிரவு செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது.  திருச்சி செல்லும் சாலையில் சின்னவேப்பநத்தம் பகுதியை நள்ளிரவு11.15 மணியளவில் கடக்கையில், திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த டாடா சுமோ கார், லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த கோர விபத்தில், டாடா சுமோ காரில் இருந்த டிரைவர் உட்பட 6 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் கார் மற்றும் லாரி பயங்கர சேதமடைந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர்.  இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அந்த காருக்குள் இருந்த 6 சடலங்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து எஸ்.பி. அருளரசு நிருபர்களிடம் கூறியதாவது:  டாடா சுமோ காரில் பயணம் செய்த 2 பேர், நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடியைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களது டிரைவிங் லைசென்சை வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற 4 பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்த 6 பேரும் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த கட்டிடத்தில் டைல்ஸ் ஒட்டும் பணி நடந்துள்ளது. அந்த பணியை முடித்து கொண்டு வரும்போது விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை தேடி வருகிறோம்.



Tags : collision ,Namakkal Namakkal ,Accident , Accident,Namakkal, Truck-to-face,
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு