×

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க போக்சோவில் புது விதிமுறை: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி:  சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் செய்யப்பட்ட புதிய திருத்தங்கள் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல் போக்சோ சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கும் வகையில், இச்சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை நேற்று அது வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:

* பள்ளிகள், குழந்தைகள், சிறுவர்கள் பராமரிப்பு இல்லங்கள், விளையாட்டு மையங்கள் அல்லது வேறு எந்த குழந்தைகளுக்காக அமைப்பாக இருந்தாலும், அங்கே வேலை செய்யும் பணியாளர்களின் முழு விவரங்கள் காவல் துறை மூலம் சரிபார்க்கப்படுவது கட்டாயமாகும்,
* சிறுவர்கள், குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோக செய்யப்படுவது குறித்த புகார்களை கொடுப்பதற்கான நடைமுறைகள், குழந்தைகளுக்கு கட்டாய கல்வியை வழங்குதல் ஆகியவையும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன.  
* சிறுவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை தடுப்பதற்கும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு ஆபாச படத்தை ஆன்லையன் மூலம் பெறும் எந்த நபரும், அதை சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும், அடுத்தவருக்கு பரப்புவதற்கும், பிரசாரம் செய்வதற்கும் அல்லது காட்சிப்படுத்துவதற்கும் எல்லா வகையிலும் வாய்ப்புகள் உள்ளன. இது குறித்த தகவல்களை சிறப்பு சிறார் காவல் பிரிவு அல்லது போலீசார் அல்லது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க வேண்டும்.
* போக்சோ சட்டத்தின் புதிய விதிகளின்படி மாநில அரசுகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பூஜ்ய சகிப்புத்தன்மை என்ற கொள்கையின் அடிப்படையில்,  குழந்தைகள் பாதுகாப்பு கொள்கைளை வகுக்க வேண்டும்.
* போக்சோ சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் புதிய விதிகள், கடந்த மார்ச் 9 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

Tags : Paxo ,Children: Federal Government Announcement Paxo ,Announcement ,Children: Federal Government , Juveniles, sex crimes, poxo, new rule, federal government
× RELATED மதுரையில் 22-ம் தேதி அரசு சித்திரை பொருட்காட்சி: ஆட்சியர் அறிவிப்பு