×

டிஜிபி மகனிடம் ஐபோன் திருட்டு: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் கிளப்பிற்கு வந்த ஆந்திர மாநில டிஜிபி மகனிடம் ஐபோன் மற்றும் ஐபேடை திருடியது தொடர்பாக கார் டிரைவர் மற்றும் தனியார் கிளப் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் அச்சுதானந்த தாஸ். இவர், ஆந்திர மாநில டிஜிபியாக உள்ளார்.  இவரது மகன் சுப்ரத் (38), அமெரிக்காவில் உள்ள பெனுபரா என்ற நிறுவனத்தில் பிசினஸ் மேலாளராக உள்ளார். வேலை நிமித்தமாக கடந்த 11ம் தேதி சென்னை வந்த இவர், அண்ணா சாலையில் உள்ள தனியார் கிளப்பில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு சுப்ரத் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று, அங்கிருந்து தனியார் டாக்சி மூலம் கிளப்பிற்கு வந்ததார்.
சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அவர் வைத்திருந்த  ஐபோன் மற்றும் ஐபேட் மாயமானது தெரிந்தது. உடனே டாக்சி டிரைவருக்கு போன் செய்து கேட்டுள்ளார்.

அதன்படி டிரைவரும் காரில் தேடி பார்த்துவிட்டு செல்போன் இல்லையென்று கூறிவிட்டார். பிறகு தங்கியுள்ள கிளப்பில் தான் செல்போன் மாயமாகி இருக்க கூடும் என்று உடனே சப்ரத் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி டாக்சி டிரைவர் நாகராஜன் மற்றும் கிளப்பில் உள்ள ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* புளியந்தோப்பு கே.எம் கார்டன் 7வது தெருவில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த துரை (56) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
* முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையின் பூட்டை நேற்று முன்தினம் நள்ளிரவு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த முகமது ஜாபர் (24), முகப்பேர் பாடி குப்பம் பகுதியை சேர்ந்த அகஸ்டின் (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : theft , DGP's son, iPhone, theft, police are investigating
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...