×

ஒரே புடவையில் தூக்கிட்டு கணவன், மனைவி தற்கொலை: குழந்தை இல்லாத ஏக்கமா? விசாரணை

ஆவடி: பூட்டிய வீட்டில் ஒரே புடவையில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அம்பத்தூர் அடுத்த பாடி, குமரன் நகர், மகாத்மா காந்தி ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சந்திரசேகர் (46). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி மஞ்சுளா (35). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 15 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. கடந்த ஒரு வருடமாக இந்த வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இவர்களது சொந்த ஊர். ஆந்திர மாநிலம் நகரி. சந்திரசேகரும், மஞ்சுளாவும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் சரியாக பேசுவதில்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இவர்கள், வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நேற்று காலை 10 மணி அளவில் அவர்கள் வசித்து வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கொரட்டூர் போலீசுக்கு தகவல் ெகாடுத்தனர்.  எஸ்ஐ ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.  அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
வீட்டின் ஹாலில் மின் விசிறியில் ஒரே புடவையில் சந்திரசேகரும், மஞ்சுளாவும் தூக்கில் சடலமாக கிடந்தனர். இதையடுத்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது போதிய வருமானமின்றி தற்கொலை செய்து கொண்டாரா  என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.



Tags : Investigation ,suicide , Husband, wife, suicide, child
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை