×

தன்னை சித்ரவதை செய்வதாக கூறி கணவன் வீட்டின் முன் மனைவி தர்ணா: போலீசார் விசாரணை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (25), ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (20).  இருவரும் கடந்த 2017ம் ஆண்டு  காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரமேஸ்வரி புகார் கொடுத்ததின் பேரில், இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.  சில நாட்களில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை பரமேஸ்வரி கணவன் வீட்டின் முன் அமர்ந்து, கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் தன்னை கொடுமைபடுத்துவதாகவும், இதனால் தனக்கு பாதுகாப்பு இல்லை  என்றும், அவர்கள் மீது நடவடிக்கை கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் பேசி, அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.    இதுகுறித்து பரமேஸ்வரி கூறுகையில், ‘கணவரும், அவரது குடும்பத்தாரும் என்னை சித்ரவதை செய்கின்றனர்.  இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. கடந்த வாரம் என்னை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு அனைவரும் கேரளாவில் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். மூன்று நாட்கள் உணவு  குடிநீர் இன்றி தவித்த நான் முதல் மாடி வழியாக மேல் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினேன். இதில் எனக்கு காயம் ஏற்பட்டது. எனக்கு உடுத்திக் கொள்வதற்கு மாற்று உடை இல்லை. அதை கேட்டால் கணவன் மற்றும் அவர் குடும்பத்தார் தர மறுக்கிறார்கள். எனவே என்னுடைய கணவன் மற்றும் அவர் குடும்பத்தார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : house ,Police investigation ,Durna , Husband's house, wife's, police are investigating
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்